'நவம்பர் முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படாது'
ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: வரும் நவம்பர் மாதம் முதல், இளநிலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பருவத் தேர்வுகளும் நேரடியாகவே நடத்தப்படும், ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி கூறுகையில், நவம்பர் மாதம் முதல், அனைத்து மாணவ, மாணவியர்களும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறைகளில்தான் எழுதுவார்கள்.
இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்
Advertisement
Advertisement
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும், மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.