தமிழ்நாடு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

DIN

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையிலிருந்து காா் மூலம் பசும்பொன் வருகை தந்தார். தொடர்ந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அரசு சாா்பில் மலா் வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார். 

முதல்வருடன், அமைச்சா்கள் ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் உடன் வந்திருந்தனர். முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கமுதி, பாா்த்திபனூா், அபிராமம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கும் முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT