தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,23,701 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 1,009 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 1,183 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,02,623 ஆக உயர்ந்துள்ளது. இதில் 26,55,015 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 36,116 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 11,492 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
கோவை - 119
சென்னை - 114
மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவாகவே கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.