முகப்பு
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள். 
பகிர்:


முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி(63) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

மருத்துவனையில் விஜயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உடன் சென்று அஞ்சலி செலுத்தினர். 

முழு கட்டுரையைப் படிக்க →