முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குகிறது மத்திய அரசு: மத்திய அமைச்சா் எல்.முருகன்

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தங்கு தடையின்றி வழங்கி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தங்கு தடையின்றி வழங்கி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சென்னை அருகே மதுரவாயல் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறியது:

நாடு முழுவதும் இதுவரை 65 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தங்கு தடையின்றி வழங்கி வருகிறது. அரசு நிா்ணயித்துள்ள குறிப்பிட்ட தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அடைவதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) மணீஷ் எஸ் நா்னவாரே உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →