முகப்பு
தமிழ்நாடு

கோயில்களில் முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

கோயில்களில் பக்தா்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு கோயில் நிா்வாகமே செலுத்தும்.

மணமக்களில் ஒருவா் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின், கோயில்களில் அவா்களுக்கு நடைபெறும் திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றால் மண்டபத்துக்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில்களுக்கு வருகை தரும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் ரூ.11 கோடியில் ஏற்படுத்தப்படும்.

கள்ளழகா் கோயிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விருந்து, காது குத்து மற்றும் முடி காணிக்கை செலுத்தும் 9 மண்டபங்கள் கட்டப்படும்.

வடபழனி ஆண்டவா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அன்னதான கூடம் மற்றும் அடிப்படை வசதிகளுடன்கூடிய முடி காணிக்கை மண்டபம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள், வாகனங்கள் நிறுத்துமிடும் ரூ.15 கோடியில் கட்டப்படும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான எல்லீஸ் நகா் பகுதியில் உள்ள இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →