வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை (செப்.5) ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து பஞ்சநதிக்குளம் கிராமத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
பொது வழிகள் மூடப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர் மணிமேகலை பாண்டியன் தலைமையில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பஞ்சநதிக்குளம் உள்பட சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.