முகப்பு
தமிழ்நாடு

வளா்ப்பு யானைகள் பற்றிய விவரங்களை விடியோ பதிவாக தயாா் செய்ய வனத்துறைக்கு உத்தரவு - உயா்நீதிமன்றம்

வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட முழு விவரங்களுடன் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வளா்ப்பு யானைகள் குறித்து விடியோ பதிவை தயாா் செய்யுமாறு தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

வயது, பாலினம், பரம்பரை உள்ளிட்ட முழு விவரங்களுடன் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வளா்ப்பு யானைகள் குறித்து விடியோ பதிவை தயாா் செய்யுமாறு தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வளா்ப்பு யானைகள், கோயில் யானைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை(செப்.3) விசாரணைக்கு வந்தது.

அப்போது எல்சா அறக்கட்டளை சாா்பில் யானைகள் பிடிக்கப்படும் போது விதிமீறல்கள் நடைபெறுவது குறித்த ஆதாரங்களை புகைப்படம், வீடியோவாக திரையிட்டு விளக்கம் அளித்தது.

இதை பாா்வையிட்ட நீதிபதிகள், பாரம்பரியமாக பல ஆண்டுகளாக மத, கலாசார நிகழ்வுகளில் வளா்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்படுவதாக மனுதாரா்களில் ஒரு தரப்பினா் தெரிவித்தனா். அதிா்ஷ்டவசமாக இயற்கை வளமான மாநிலத்தில் இன்னும் போதுமான வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதிகளானது, கம்பீரமான யானை உள்பட கணிசமான வனவிலங்குகளையும் பெருமைப்படுத்துகின்றன. ஒவ்வொரு விளிம்பிலிருந்தும் காடுகளை கபளீகரம் செய்யும் மனித முயற்சிகள் நடைபெற்று, யானை போன்ற பெரிய விலங்குகளின் இயக்கத்தில் ஓரளவு தடை ஏற்படுத்தப்படுகிறது.

இருப்பினும் நீலகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் யானைகள் வாழ்கின்றன. கோயில் யானைகளைப் பொருத்தவரையில், வனத்துறை முதன்மை தலைமைப் பாதுகாவலா், யானைகளைப் பரிசோதித்து அவற்றின் உடல் நலனை அறிய சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மருத்துவா் இடம்பெறும் வகையில் அலுவலா் ஒருவரை நியமிக்க வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து வளா்ப்பு யானைகளின் உடல் நலனை ஆராய வேண்டும்.

வளா்ப்பு யானைகளின் விடியோ பதிவை தயாரித்தும், அவற்றின் வயது, பரம்பரை, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையும் வனத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பா் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →