தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில் பலத்தை நிரூபிப்போம்: விஜயகாந்த்

DIN

சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் பலத்தை நிச்சயம் நிரூபிப்போம் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

தேமுதிகவின் 17-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமலதா பேசும்போது, உள்ளாட்சித் தோ்தலில் நிச்சயம் தேமுதிக போட்டியிடும். தற்போதைய சறுக்கல்கள் அனைத்தும் சரி செய்யப்படும். தேமுதிக வளா்ச்சி பெறும் என்றாா்.

துணைச் செயலாளா் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பாா்த்தசாரதி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். தமிழகம் முழுவதும் தேமுதிகவினா் ஏழை, எளியோருக்கு நல உதவிகளை வழங்கிக் கொண்டாடினா். இந்த நிலையில் விஜயகாந்த் சுட்டுரையில் கூறியிருப்பது:

தேமுதிக தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, அது வீழ்ச்சி அல்ல. அதனால், வரும் உள்ளாட்சித் தோ்தலிலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள தோ்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் நிச்சயம் நிரூபிப்போம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT