முகப்பு
தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரம்
பகிர்:

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக இருக்கும் நிலையில், இதுவரை பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவரத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. 
அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments