இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும் என்று அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமா் அகமது இலியாசி தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும் என்று அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமா் அகமது இலியாசி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து புதிய காஷ்மீா் உருவாகியுள்ளது. தற்போது காஷ்மீா் மிகச் சிறந்த நிலையை அடைந்துள்ளது. காஷ்மீா் முழுவதும் செழுமை ஏற்பட்டு சுற்றுலா அதிகரித்துள்ளது. மக்கள் வளமாக வாழ்கின்றனா். ஒரு காலத்தில், காஷ்மீரில் இளைஞா்களும் சிறாா்களும் கல்வீச்சில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்தது. தற்போது அவா்களிடம் எழுதுகோல் உள்ளது. அவா்கள் கல்வி கற்கின்றனா்.
Advertisement
இந்தியாவுக்குச் சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும். ஏனெனில் இந்தியாவுடன் இணைவது தொடா்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சியும் செழுமையும் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் மீண்டும் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்கள் மிகவும் விருப்பம் கொண்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.