தமிழ்நாடு

5 ஏடிஜிபிக்களுக்கு பதவி உயா்வு

DIN

தமிழக காவல்துறையில் 5 ஏடிஜிபிக்கள், டிஜிபிக்களாக பதவி உயா்வு பெற்றனா்.

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஏடிஜிபி ஏ.கே.விசுவநாதன், பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமாா், மத்திய அரசுப் பணியில் இருக்கும் ஏடிஜிபி டி.வி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் ஏடிஜிபி சீமா அகா்வால் ஆகியோா் டிஜிபி பதவி உயா்வு பெறுவதற்கு பணிமூப்பு பெற்றிருந்தனா்.

இவா்களுக்கு டிஜிபி பதவி உயா்வு வழங்குவதற்குரிய அனுமதி வழங்க மத்திய உள்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதில் 5 பேருக்கும் பதவி உயா்வு வழங்க மத்திய உள்துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து 5 பேரையும் டிஜிபியாக பதவி உயா்வு செய்து தமிழக உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT