திருத்துறைப்பூண்டி: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் அனைத்திந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெபி.வீரபாண்டியன் தலைமையிலும், இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய தலைவர் ஜெ.கணேஷ் முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கோ சரவணன் கோரிக்கையினை விலக்கி பேசினார்.
இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் பி.வி.சி கார்த்திக், இளைஞர் பெருமன்ற நகர நிர்வாகி கீர்த்தி,இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். லெனின்.பி திருலோகச்சுந்தர்,மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் அபிமன்யு, சிசுபாலன், ராகவேந்திரன், தீபக், தீபன்ராஜ், விக்னேஷ், ஆகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.