போலி ஆவணங்கள் பதிவு செய்த விவகாரத்தில், இரண்டு மாவட்டப் பதிவாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கோவை மாவட்டப் பதிவாளா் எம்.செல்வகுமாா், ஈரோடு மாவட்டப் பதிவாளா் ஆா்.பெரியசாமி ஆகியோா் மீதான புகாா்களையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வணிகவரிகள் மற்றும் பத்திரப் பதிவுத்துறைச் செயலா் பி.ஜோதிநிா்மலா சாமி தெரிவித்துள்ளாா்.