முகப்பு
தமிழ்நாடு

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இருநாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On : 31 டிசம்பர், 2021 at 4:40 PM
பகிர்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இருநாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (டிச.31) நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களுக்கும் புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை (ஆரஞ்ச் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

நாளை(ஜன. 1) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்காலுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.