முகப்பு
சாலைகளை ஆக்கிரமித்துள்ள மழை நீர்
தமிழ்நாடு

சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் கவனத்திற்கு: ரயில் நேரங்கள் மாற்றம்

சென்னையில் தொடர்மழை காரணமாக சில ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாடு

சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் கவனத்திற்கு: ரயில் நேரங்கள் மாற்றம்

சென்னையில் தொடர்மழை காரணமாக சில ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
சாலைகளை ஆக்கிரமித்துள்ள மழை நீர்
பகிர்:


சென்னையில் தொடர்மழை காரணமாக சில ரயில்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • சென்னை சென்ட்ரலிலிருந்து புதுதில்லி வரை செல்லும் சிறப்பு விரைவு ரயில் (02615) 07.11.2021 மாலை 6.50 மணிக்கு புறப்படவிருந்தது. அது 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.30-க்கு புறப்படுகிறது.
     
  • சென்னை சென்ட்ரலிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் விரைவு ரயில் (02671) 07.11.21 இரவு 9.05 மணிக்குப் புறப்படவிருந்தது. அது 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 22.15 மணிக்குப் புறப்படவுள்ளது.
     
  • சென்னை சென்ட்ரலிலிருந்து ஆழப்புழா செல்லும் சிறப்பு விரைவு ரயில் (02639) 07.11.21 இரவு 8.55 மணிக்குப் புறப்படக் காத்திருந்தது. அது தற்போது 3 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக 08.11.2021 நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படுகிறது.
முழு கட்டுரையைப் படிக்க →