முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

இது வெறும் டிரைலர்தான், பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன: எடப்பாடி பழனிசாமி ட்வீட்

நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்புப் பரிசாக 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு

இது வெறும் டிரைலர்தான், பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன: எடப்பாடி பழனிசாமி ட்வீட்

நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்புப் பரிசாக 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
கோப்புப்படம்
பகிர்:


நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்புப் பரிசாக 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது (2022-23) உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் ட்வீட்:

"சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது."

முழு கட்டுரையைப் படிக்க →