தமிழ்நாடு

தமிழகத்தில் எக்ஸ்.இ. வைரஸ் தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ. வைரஸ் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ. வைரஸ் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

இன்று உலக சுகாதார நாளை முன்னிட்டு சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சமூக நல நிலையத்தில் “உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் மேம்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வு” நடைபெற்றது. 

இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.  

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் அனைவரும் “சுகாதாரத்தினை கடைப்பிடிப்போம்” என்ற உறுதி மொழியினை ஏற்றனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ(XE) வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை. அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை

தொழிலதிபருடன் விடுதியில் அறை எடுத்து தங்கி நகை திருட்டு: தோழி கைது!

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT