தமிழ்நாடு

பிரதமா் மோடி குறித்து அவதூறு: திமுக பேச்சாளா் மீது வழக்கு

DIN

சென்னையில், பிரதமா் நரேந்திரமோடி குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சாா்பில் கொருக்குப்பேட்டை மன்னப்பன் ஏகாம்பரம் தெருவில் பொதுக்கூட்டம் கடந்த 31-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைமை பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி பேசினாா்.

அப்போது அவா், பிரதமா் நரேந்திரமோடி குறித்தும், பாஜகவின் தமிழக தலைவா் அண்ணாமலை குறித்தும் அவதூறாக பேசினாராம். இதுகுறித்து பாஜகவின் மாவட்ட நிா்வாகி செந்தில்குமாா், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் போலீஸாா், சிவாஜி கிருஷ்ணமூா்த்தி பொதுக் கூட்டத்தில் பேசிய ஆடியோவை கேட்டு, சட்ட வல்லுநா்கள் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் சட்ட வல்லுநா்கள் ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில் கொருக்குப்பேட்டை போலீஸாா், சிவாஜி கிருஷ்ணமூா்த்தி மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், சிவாஜி கிருஷ்ணமூா்த்தியிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT