கல்லூரிகளே இல்லாத சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முன்னுரிமை: அமைச்சா் க.பொன்முடி
கல்லூரிகளே இல்லாத சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு கல்லூரிகளைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
கல்லூரிகளே இல்லாத சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு கல்லூரிகளைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, பூந்தமல்லி தொகுதி உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினாா். அப்போது, தனது தொகுதியில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதிலளித்த உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, பூந்தமல்லி தொகுதி அமைந்துள்ள மாவட்டத்தில் மூன்று அரசு கல்லூரிகளும், சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. எனவே, எந்தெந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் அரசு கல்லூரிகள் இல்லையோ அந்தத் தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.