தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை: அமைச்சர் சக்கரபாணி

DIN

சென்னை:நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள், கேழ்வரகு விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதில் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் பழங்குடியினர், மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கத்தை பாதுகாக்க கேழ்வரகு வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினி மயமாக்கப்படும் மற்றும் மாநில, மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள், எடையாளார்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT