முகப்பு
தமிழ்நாடு

1,800 ஆண்டு பழமையான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் பறிமுதல்

இந்தியாவிலிருந்து கடத்த முயன்ற நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 8 ஏப்ரல் 2022, 3:06 pm IST
1,800 ஆண்டு பழமையான நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் பறிமுதல்
பகிர்:

சென்னை: இந்தியாவிலிருந்து கடத்த முயன்ற நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

நுண்ணறிவு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய சரக்கு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த சரக்குகளை சோதனையிட்டதில், நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்க சிலையை கண்டுபிடித்தனர்.

ஏற்றுமதி ஆவணக் குறிப்பில் கும்பகோணத்தில் உள்ள கலை, கைவினைப் பொருள் நிலையத்தில் இதனை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொல்பொருள் துறையிடமிருந்து பெற வேண்டிய சான்றிதழ் அளிக்கப்படவில்லை. சிலையை சோதனையிட்டதில் தொன்மை வாய்ந்ததாக தோற்றமளித்தது. 36 சென்டி மீட்டர் உயரமுள்ள இந்த வெண்கல சிலை 4.56 கிலோ எடை கொண்டதாகும். இந்தச் சிலை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை அடுத்த கெடிலம் என்ற ஊரை சேர்ந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. 

Advertisement

Advertisement

இந்தச் சிலை 1800 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த சிலை என தொல்லியல் துறை சந்தேகிக்கிறது. இதனைத் தொடர்ந்து சிலை மற்றும் இதரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.உதய் பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.