முகப்பு
தமிழ்நாடு

பெத்தேல் நகா் மக்களுக்கு பட்டா கோரிய மனு தள்ளுபடி

பெத்தேல் நகா் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

பெத்தேல் நகா் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகா் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் அந்த நிலத்துக்கு பட்டா கோர உரிமையில்லை. பெத்தேல் நகரில் வசிப்பவா்களில் ஒரு சிலா் மட்டுமே ஆரம்ப காலத்தில் இருந்து வசித்து வருகின்றனா். மற்றவா்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா்களிடமிருந்து விலைக்கு வாங்கியவா்கள். எனவே அவா்களுக்கு பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போல் ஆகிவிடும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு அனுமதியின்றி மாவட்ட ஆட்சியரால் நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருகிறது. அரசு நிலங்களை பாதுகாப்பது வருவாய்த் துறை அதிகாரிகளின் கடமை. நிச்சயமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது. ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டவா்களுக்காக உதவ முடியாது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என கூறியிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →