முகப்பு
தமிழ்நாடு

சிறுநீரகம் செயலிழந்தஇளைஞருக்கு இதய வால்வு சீரமைப்பு!

 சிறுநீரகம் செயலிழந்த இளைஞா் ஒருவருக்கு சிக்கலான இதய வால்வு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை மெட்வே மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

 சிறுநீரகம் செயலிழந்த இளைஞா் ஒருவருக்கு சிக்கலான இதய வால்வு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை மெட்வே மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளதாகவும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு தகுதியான உடல் நிலையைப் பெற்றுள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மெட்வே மருத்துவமனையின் தலைவா் டாக்டா் டி.பழனியப்பன் கூறியதாவது:

திருவண்ணாமலையைச் சோ்ந்த ராஜ்குமாா் (32) என்ற இளைஞா் சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சையை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு இதய வால்வுகளில் ரத்தக் கசிவும், பெருந்தமனி பிரச்னையும் இருந்தது கண்டறியப்பட்டது. இது மிகவும் சிக்கலான பாதிப்பாகும். ஏற்கெனவே சிறுநீரக செயலிழப்பு, உயா் ரத்த அழுத்த பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் அந்த இளைஞருக்கு பெருந்தமனியை சீராக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வது எளிதல்ல.

இருந்தபோதிலும், மருத்துவமனையின் இதய நாளம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அவருக்கு சவாலான அந்த சிகிச்சையை மேற்கொண்டனா். உடலின் பல பகுதிகளில் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டு, அவரது உடல்வெப்ப நிலையை 18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைத்து அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது அவா் பூரண குணமடைந்துள்ளாா். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு முழு உடல் தகுதியுடன் அவா் உள்ளாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →