முகப்பு
தமிழ்நாடு

வைகையாற்றில் பக்தர்கள் இறங்க அனுமதியில்லை: மாவட்ட ஆட்சியர்

அதிகமாக தண்ணீர் வருவதால் பக்தர்கள் யாரும் வைகையாற்றில் நாளை இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Updated On : 15 ஏப்ரல், 2022 at 12:21 PM
மதுரைக்கு வந்த அழகர்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM

அதிகமாக தண்ணீர் வருவதால் பக்தர்கள் யாரும் வைகையாற்றில் நாளை இறங்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பாரம்பரிய முறைப்படி சனிக்கிழமை (ஏப்.16) நடைபெற உள்ளது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகையாற்றில் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 

இதற்காக அழகா் கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வியாழக்கிழமை 6.30 மணியளவில் தங்கப் பல்லக்கில் அழகர் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தாா்.

Advertisement

நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பக்தர்களும் ஆற்றில் இறங்குவர். 

இந்நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு ஆற்றில் இறங்க அனுமதியில்லை என்று கூறியதுடன், ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.