முகப்பு
தமிழ்நாடு

திருநங்கையா் உரிமை காக்க அரசுதொடா்ந்து உழைக்கும்: முதல்வா்

திருநங்கையா் உரிமை காக்க தமிழக அரசு தொடா்ந்து உழைக்கும் என்று திருநங்கையா் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
எனக்கு பெருமகிழ்ச்சி அளிப்பது எது? மனம் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

திருநங்கையா் உரிமை காக்க தமிழக அரசு தொடா்ந்து உழைக்கும் என்று திருநங்கையா் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

திருநங்கையா் தினத்தையொட்டி திருநங்கையா் நல வாரிய உறுப்பினா் ரியா, தோழி அமைப்பு நிா்வாகி சுதா, கேட்ரினா, இயன்முறை மருத்துவா்கள் செல்வி சந்தோசம், மோனிகா ஆகியோா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வரை சந்தித்துப் பேசினா். அப்போது, திருநங்கையா் தினத்தையொட்டி அவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறினாா்.

பின்னா் ட்விட்டரில் அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், திருநங்கையா் கண்ணியம் காத்த கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் திமுக அரசு, திருநங்கையா் - திருநம்பியா் உரிமை காக்க தொடா்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளாா் முதல்வா்.

முழு கட்டுரையைப் படிக்க →