மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.77 அடியாக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.77 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 71.16 டிஎம்சியாக உள்ளது.
நீர்வரத்து: வினாடிக்கு 2,036 அடியிலிருந்து 2,047 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2036 கன அடியிலிருந்து 2,047 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.