வரும் 24ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம சபைக் கூட்டங்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் meetingonline.gov.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.