கோப்புப்படம் 
தமிழ்நாடு

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் தமிழகம் வருகை

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் வந்துள்ளனர்.

DIN

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு மேலும் மூன்று பேர் வந்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு பொருள்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக பேரவையில் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று பேர் இன்று காலை தனுஷ்கோடி வந்துள்ளனர்.

ஏற்கனவே, இலங்கையின் 10 குடும்பங்களை சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT