இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மண்டபம் மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 4 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.