ராமஜெயம் கொலை வழக்கில்துப்பு கிடைத்தது: தமிழக அரசு
அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
அமைச்சா் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த கொலை தொடா்பாக புலன் விசாரணை குறித்த ரகசிய அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தபோது, மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞா் இதனைத் தெரிவித்தாா். அறிக்கையைப் படித்து பாா்த்த நீதிபதி வி.பாரதிதாசன், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது, திருப்தி அளிக்கிறது. அடுத்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது, நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறி, விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.