புதுச்சேரியில் மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், அரவிந்தர் ஆசிரம குழுமத்தின் தலைவர் பிரதீப் பிரேம், பல்கலை துணைவேந்தர் குர்மீத் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.