தமிழ்நாடு

தேர் விபத்து: ஒருநபர் விசாரணைக் குழு அமைப்பு

DIN

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, விவாதங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர் திருவிழா விபத்து குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி குமார் ஜெயந்த் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT