தமிழ்நாடு

தமிழகத்தில் 2030-க்குள் மின் உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

DIN

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் (டான்ஜெட்கோ) 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சிங்கார சென்னை 2.0 போன்று 'TNEB 2.0' ஐ டான்ஜெட்கோ வெளியிடும் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் மின் உற்பத்தியை இரட்டிப்பாக்கப்படும் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக விநியோக முறை மேம்படுத்தப்படும் என்றார்.

தற்போது, ​​தமிழகத்தில் மின் உற்பத்தி 33,877 மெகாவாட்  ஆக உள்ளது, மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 77,153 மெகாவாட்டை தொடுவதற்கு டான்ஜெட்கோ இலக்கு வைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

செயல்பாட்டு சிக்கல்கள் இருந்தபோதிலும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடுத்தர மற்றும் குறுகிய கால திறந்த மதிப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் தமிழகம்  மின்சாரத்தை வாங்குகிறது என்று கூறினார்.

அனல் ஆலைகளுக்கு நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 48,000 டன் நிலக்கரி மட்டுமே கிடைப்பது, டான்ஜெட்கோ எதிர்கொள்ளும் பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT