முகப்பு
தமிழ்நாடு

கஞ்சா வேட்டை: 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்; 2,000-க்கும் மேற்பட்டோர் கைது

கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மார்ச் 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது.

Updated On : 28 ஏப்ரல் 2022, 5:36 pm IST
கஞ்சா வேட்டை: 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்; 2,000-க்கும் மேற்பட்டோர் கைது
பகிர்:



கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மார்ச் 28ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து வருகிறது.

கடந்த 31 நாள்களில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா, 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 44.9 டன் குட்கா மற்றும் 113 வானங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement

இந்த சிறப்பு நடவடிக்கையில் பல கஞ்சா மொத்த வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளும், சொத்துகளும் முடக்கப்பட்டன.

தமிழகத்தில் போதைப் பொருள்களை கடத்துவோர், பதுக்குவோர் விற்போர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.