தமிழ்நாடு

ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க குழு அமைப்பு

ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

DIN

ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை எனக் கூறியும், கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா் நவ்ரோஸ் கொ்சாஸ்ப் மோடி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் பிறப்பித்த தீா்ப்பு: ஆரோவில் பகுதியில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. சாலை அமைக்கும் பகுதியை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கும் வகையில் சாலையை எப்படி அமைக்கலாம் என 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை எந்த மரங்களையும் வெட்டக் கூடாது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT