தமிழ்நாடு

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம் எடுக்கத் தடை

DIN

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படம், விளம்பர, திருமண போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அனுமதியின்றி போட்டோ சூட் எடுக்கப்பட்டதால் தொல்லியல்துறை நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புக்கு 2011ஆம் ஆண்டு முதல் தடை உள்ள நிலையில் தற்போது குறும்படங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

மதுரையிலுள்ள திருமலைநாயக்கர் மகால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புராதனச் சின்னமாகும். மதுரை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக திருமலைநாயக்கர் மகாலையே அதிகம் பார்வையிடுகின்றனர்.  

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாலில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்பட்டது. தினமும் இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT