முகப்பு
தமிழ்நாடு

பயிர்க்காப்பீடு: ரூ.2,057 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.2,057 கோடி நிதியை அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.2,057 கோடி நிதியை அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

பயிர்க்காப்பீடு நிறுவனங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ-டோக்கியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎப்சி எர்கோ, ரிலையன்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை முடிய சாகுபடி செய்யப்படும் குறுவை பருவத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →