ஆதனூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களுடன் வந்த லாரிகள். 
தமிழ்நாடு

வேதாரண்யம்: துறைமுகம் கட்டும் பணிக்கு வந்த குழாய்களால் பரபரப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் துறைமுகம் அமைக்கும் பணிக்காக 25 லாரிகளில் ஏற்றி வந்த ராட்சத குழாய்களால் மக்களிடையே வியாழக்கிழமை இரவு முதல் பரபரப்பு நிலவியது.

வேதாரண்யம், ஆற்காட்டுத்துறையில் ரூ.150 கோடியில் துறைமுகம் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக 25 லாரிகளில் குழாய்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் லாரிகள் வந்துள்ளதால் பகல் நேரத்தில் குழாய்களை இறக்குவதற்கு ஏதுவாக நகரப் பகுதிக்கு முன்பாக ஆதனூர் கிராமத்தின் பிரதான சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே  இந்த குழாய்கள் ஹட்ரோ கார்பன் அல்லது ஓஎன்ஜிசி  திட்டப் பணிகளுக்கு வந்துள்ளதாக சந்தேகம் உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியது. 

இதையடுத்து, இதுகுறித்து விசாரித்த தனிப் பிரிவு போலீசார், இவை துறைமுகம் பணிக்கு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT