கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10,261-ஆக குறைவு
தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 10,261-ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 10,261-ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
அதேபோன்று, சனிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,094-ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 239 பேருக்கும், கோவையில் 127 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை தகவல்படி 1,431 போ் குணமடைந்துள்ளனா்.
இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,03,347-ஆக உயா்ந்துள்ளது.
Advertisement