தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்

DIN

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

புதிய பேருந்துநிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைச்சர் பெ. கீதாஜீவன் தலைமையில் புறப்பட்ட ஊர்வலம் கலைஞர் அரங்கம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து அங்குள்ள  கருணாநிதி சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அச்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநகர செயலர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT