முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,057 பேருக்கு கரோனா: சிகிச்சை பெறுவோர் 9,889 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 1,057 பேருக்கு கரோனா: சிகிச்சை பெறுவோர் 9,889 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,057 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 1,057 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,52,698-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கோவை 122, செங்கல்பட்டு 90 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,04,776-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,889 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →