தமிழ்நாடு

'அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது'

நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

DIN

மதுரை: நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும், மாண்பையும் குறைக்க வேண்டாம் எனவும்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நிர்வாக நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள்,  சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது போன்றவற்றை எல்லாம் பொதுநல வழக்காக பதிவிட வேண்டாம். அது நீதிமன்றத்தின் பணி இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

SCROLL FOR NEXT