உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு இன்று விசாரணை

அதிமுக தலைமை அலுவலக விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது.

DIN

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்றபோது, அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், கட்சித் தலைமை அலுவலகத்துக்கு உரிமை கோரி எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில், "அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த் துறை ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமியும் இந்த மேல் முறையீட்டு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், ஓபிஎஸ்ஸின் மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

முன்னதாக, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில், பொதுக்குழு செல்லாது எனவும், இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள அதிமுக அலுவலக வழக்கு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்த ஆண்டின் கோரமான காட்டுத்தீ! 27,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்! | France

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT