முகப்பு
தமிழ்நாடு

வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை நெற்குன்றத்தில் வியாபாரி வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

சென்னை நெற்குன்றத்தில் வியாபாரி வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெற்குன்றம் கோல்டன் ஜாா்ஜ் நகா் சீனிவாசன் தெருவைச் சோ்ந்தவா் கணேஷ் (45). பால், தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வந்தாா். கணேஷ் புதன்கிழமை காலை வீட்டின் கதவை பூட்டிவிட்டு, வியாபாரத்துக்காக வெளியே சென்றாா். இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.

அப்போது, வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தன. ஜெ.ஜெ.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.