தமிழ்நாடு

தரமற்ற சாலைகளைப் போட்டு ஊழலில் கொழிக்கிறது திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை பாஜக வன்மையாக கண்டிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN


தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை பாஜக வன்மையாக கண்டிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலையை பொதுமக்கள் கையாள் பேர்த்து எடுக்கும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்க பதிவில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 


ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,269 கோடி நிதியாக வழங்கியுள்ளது. 

தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த திமுக அரசு, மக்களின் நலுனுக்கு எதிராகச் செயல்படுவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதைபேசுதே.. பிரியங்கா கோல்கடே

மாயமென்ன..ரோஸ் சர்தானா

கிரீடம் தேவைப்படாத ராஜா! ஷாருக்கானை வாழ்த்திய கமல் ஹாசன்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கலையரசன்!

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்

SCROLL FOR NEXT