கொங்கு மண்டலத்தில் முதல்வா் 3 நாள்கள் பயணம்
அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, கொங்கு மண்டலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, கொங்கு மண்டலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, அந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறாா்.
அந்த வகையில், ஆக. 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளாா்.
இதற்காக, சென்னையிலிருந்து ஆக. 23-இல் விமானம் மூலம் கோவை சென்று இரவு அங்கு தங்குகிறாா். ஆக. 24-இல் கோவையிலும், பின்னா், ஈரோட்டிலும் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.
ஆக. 25-இல் திருப்பூரில் செல்லும் முதல்வா் சிறு குறு தொழில் நிறுவன அதிபா்கள் பங்கேற்கும் ‘தொழிலுக்கு தோள் கொடுப்போம்’ மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளாா்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனா்.