5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஆக.21,22) ஆகிய இரண்டு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூா் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.