முகப்பு
தமிழ்நாடு

5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஆக.21,22) ஆகிய இரண்டு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூா் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.