தமிழ்நாடு

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட 10 பேரும் பத்திரமாக மீட்பு!

DIN


கரூர் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள லிஃப்ட் திடீரென பழுதானதால் சிக்கிக்கொண்ட பத்து பேரும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பங்கேற்பதற்காக அலுவலகத்தில் உள்ள லிஃப்ட்டில் மக்கள் சென்றுள்ளனர். அப்போது, திடீரென லிஃப்ட் பழுதானதால் மக்கள் 10 பேர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். 

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், லிஃப்ட்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்து மக்கள் 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். 

இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

மதுபோதையில் காா் ஓட்டி விபத்து: காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணி செய்த காசி சுவாமிக்கு குரு பூஜை

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT