தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:கொலை வழக்கில் நடவடிக்கை: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுத்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுத்து, கைது செய்ய வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையை தமிழக அரசிடம் அளித்துள்ளது.
போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் குறிபாா்த்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் காவல் துறை அதிகாரிகள் உள்பட பலா் மீது ஸ்டொ்லைட் நிா்வாகத்துக்கு ஆதரவாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா் என்பது ஆணைய அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.
ஆணையத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.